பாதாள அறையில் ஆயிரக் கணக்கில் உடல்கள்; அரசுக்கு தெரியுமா என பண்ருட்டி வேல்முருகன் கேள்வி

சென்னை:

சேவை மையம் ஒன்று விற்பனைக்காக மனித உடல்களை ஆயிரக்கணக்கில் பாதாள அறையில் ஸ்டாக் வைத்துள்ளது குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா? ஏன் நடவடிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“என்ஜிஓ அதாவது சேவை மையம், அரசியலுக்கும் வந்துவிட்டது. காரணம் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும் வெளிநாட்டுக் கரன்சிதான்.

பெயர்தான் சேவை மையம்; ஆனால் நடப்பதோ வர்த்தகம் அது எந்த வர்த்தகமாகவும் இருக்கலாம்;வகைதொகையற்ற ’பணம்’ வர்த்தகத்தின் மூலம்தானே சாத்தியம்!

அதனால்தான் யாருமே செய்யாத, போட்டியே இல்லாத மைய வர்த்தகத்தை அதாவது பிண வியாபாரத்தைத் தேர்வு செய்திருக்கிறார் தாமஸ்!

கேரளாவைச் சேர்ந்தவரான இந்த தாமஸ், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக தன் சேவை மையத்தை நடத்திவருகிறார்.

ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதித்தோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தன் சேவை மையத்தில் வைத்து பராமரித்துவருகிறார். இந்த சேவை மையத்துக்குள் வந்த அவர்கள் பிறகு எப்போதுமே வெளியே செல்ல முடியாது என்று தெரியவருகிறது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இது புகாராக எழுந்து, 2015ல் காஞ்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி அந்த சேவை மையத்தைக் கள ஆய்வு செய்தார். அப்போது இறந்த மனித உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டுவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்தச் சடலங்கள் எதற்கும் மருத்துவ ஆவணங்களோ முறையான சான்றிதழ்களோ இல்லை.

சேவை மையம் எச்சரிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டது. 2017 செப்டம்பரோடு சேவை மையத்தின் உரிமம் முடிவுக்கு வந்தது; அதற்குப் பிறகும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் அது இயங்குவது தெரிந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கடந்த 20-ம் தேதியன்று காலை 11 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு அந்த சேவை மையத்திற்குச் சொந்தமான ஒரு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரு மூதாட்டி, ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’என்று அலறிக்கொண்டே சென்றார். அதைப் பார்த்த பைக்கில் சென்ற இளைஞர் பிரபு அந்த ஆம்புலன்சை மறித்தார்.

அதன் ஓட்டுநர் ராஜேஷுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேஷுக்குத் துணையாக மேலும் பொதுமக்கள் அங்கு வந்து கூடினர். அந்த மூதாட்டியை விசாரித்து, ஆம்புலன்சையும் சோதனை செய்தனர்.மூதாட்டி திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்பதும் அது போலியான ஆம்புலன்ஸ் என்றும் தெரிந்தது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஆம்புலன்சின் உள்ளே சுயநினைவில்லாத நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும் இருந்தார். அவர் அருகே ஒரு சடலம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. காய்கறி மற்றும் அரிசி மூட்டைகளும் இருந்தன. அந்த சடலத்துக்கும் எந்த ஆவணமும் சன்றிதழும் இல்லை.

பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்து காவலர்களிடம் ஆம்புலன்சை ஒப்படைத்தனர். இந்தச் செய்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்து பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையம் முன் கூடினர். சேவை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களைத்தான் கலைந்துபோகச் சொன்னது. மக்கள் மறுக்கவே, தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது காவல்துறை. அதோடு ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்தார் என்று சொல்லி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞரைப் பிடித்துக் காவலில் வைத்தது.

இதை அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞரை விடுவிக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறையினர் அவர்களை அவமதித்து, அவர்களின் செல்போன்களையும் பறித்து, மூவரையும் செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்று, உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டுச் சிறையில் அடைத்துள்ளனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

குற்றம் செய்தவர்களை விடுத்து புகார் கூறியவர்களையே பொய்வழக்குப் போட்டுச் சிறையிலடைத்த இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக அவர்களை விடுதலை செய்திட வலியுறுத்துகிறது.

உரிமம் இல்லாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கப்படாமல் சேவை மையம் என்று நடத்தும் தாமஸ், ’1590 உடல்கள் பாதாள பிண அறையில் உள்ளதாக’ ஊடகத்திற்கு பேட்டியே அளித்துள்ளார்.

அப்படியிருக்க, பிணக்குவியலால் காற்று மாசுபட்டுச் சுற்றுச்சூழல் பாதித்துச் சுகாதாரம் சீர்கெட்டு நோய்கள் பரவும் ஆபத்திற்கு என்னதான் நடவடிக்கை?

இறந்தவர்களின் உடல் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories