விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி மனு!

thiruvannamalai atheenam in madurai - 2026

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் பின் வண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசினார்.

மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் மனு அளித்த சுவாரஸ்யம்:

சிபிஐ அமைப்பை பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலிகள் என, பேசிய த.வெ.க. தலைவர் விஜய் பேசியதைக் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்ட திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டதாவது…

விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு, மகாராஷ்டிரா மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கூறி அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கருணாநிதி சுவாமிகள் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழகத்
தலைவர் சுல்தான் என்பவரும் வருகை தந்து கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாநிதி சுவாமிகள் :-
மகாராஷ்டிரா மாநிலத்தை போல தமிழகத்திலும் திமுக அரசு இந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

மேலும், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது சிபிஐ விசாரணை அமைப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடைய கைக்கூலி போல செயல்படுவதாக பேசியது கண்டிக்கத்தக்கது அரசியல் மேடையில் விசாரணை அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கது அல்ல; இது தொடர்பாக, விரைவில் விஜய் மீது புகார் அளிக்க உள்ளோம் என, தெரிவித்தார் மேலும் தலைமையிடம் பேசி விஜய்க்கு எதிராக போராட்டம் குறித்தும் முடிவெடுக்க உள்ளோம் என்றார்.

இது குறித்து, பேசிய சுல்தான் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென மனு அளிப்பதற்காக சுவாமிகளுடன் சேர்ந்து தானும் வந்துள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தியை வைத்து மத ரீதியாக பேசிவரும் அமைப்புகள் மத்தியில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories