பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி… புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்!

Published:

puthiyathamizhagam-protest
puthiyathamizhagam-protest

அலங்காநல்லூர் : மூப்பர், கடையர், குரும்பர் ஆகிய உட்பிரிவுகளை நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும், பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தியும், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 5 பகுதிகளில் உண்ணாவிரதம் புதிய தமிழக கட்சியினர் செவ்வாய்க்கிழமை இருந்தனர்.

பாலமேட்டில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, புதிய தமிழகம் கட்சியின் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தொடக்கி வைத்தார்.அலங்காநல்லூர் ஒன்றியச் செயலர் வெற்றிக்குமரன் முன்னிலை வகித்தார்.

கட்சியைச் சேர்ந்த கார்த்திக், பாலமேடு நகரச் செயலர் செந்தாமரை, மதுரை மாவட்ட மாணவரணிச் செயலாளர் மணிவாசகம், ஒன்றிய இணைச் செயலாளர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் பொம்மிநாயக்கன் பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில், நாட்டாம்மை மலர் மண்ணன், பாலுவும், முடுவார்பட்டியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கருப்பதுரையும், அய்யூரில் நடந்த உண்ணாவிரதத்தில், மாவட்ட துணைச் செயலர் பச்சையப்பன், மூக்கையா, மகளீர் அணி முருகேஸ்வரி, நாகையா, பிச்சை, ராசுவும், கோட்டைமேட்டில் மருது, பழனி ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

putiyathamizhagam
putiyathamizhagam

பட்டியல் பிரிவில் இருந்து நீக்கக்கோரி சோழவந்தான் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்…

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்திபுதிய தமிழகம் கட்சியினர் சோழவந்தான் அருகே நகரி உள்ளிட்ட பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக உண்ணாவிரதம் இருந்தனர் உண்ணாவிரதத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் இளம்பிறை சேதுராமன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஒன்றிய நிர்வாகி மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மகளிரணி சுதா லக்ஷ்மி இளைஞரணி திருப்பதி காசிநாதன் ஆகியோர் பேசினார்கள்

இதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Related articles

Recent articles

spot_img