December 7, 2025, 12:48 AM
25.6 C
Chennai

விடியல் ஆட்சி; டரியல் ஆச்சி! ஆடியில் மனு கொடுத்தால் ஐப்பசியில் செடி!

1746440 mkstalin - 2025

விடியல் ஆட்சியில் ஆடியில் மனுக் கொடுத்தால் ஐப்பசியில் மிளகாய் செடி வழங்கும் தோட்டக்கலைத்துறை : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

மிளகாய் செடி வழங்கிடக் கோரி ஆடி மாதம் மனுக் கொடுத்தால் ஐப்பசி 15ஆம் தேதி செடிகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழங்குகின்றனர். இதனால் பயிர்கள் பருவம் தவறி வளராமல் முற்றிலும் சேதமடைந்து விட்டது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண் அதிகாரி நாச்சியராம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு :
மதுரை மாவட்டத்தில் உள்ள கிருதுமால் நதியிலிருந்து 46 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். தற்போது நீர்வரத்து பாதையில் தூர்வார வேண்டும் என விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

பின்பு, பேசிய ஆட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசுத்துறை மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமும் தூர் வாரலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த காலங்களில் விவசாயிகள், மிளகாய் நாற்று கேட்டால், 45 நாட்கள் வளர்த்த செடிகளை வழங்குவார்கள். இதனால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால், தற்போது, கேட்டதை விட குறைவாகவும், 20 நாள் மட்டுமே வளர்ந்து செடிகளை வழங்குகின்றனர். அவை வளர்வதே இல்லை. இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை இந்த ஆண்டு சந்தித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் விளைச்சளை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், தோட்டக் கலைத்துறையில் உள்ள புதிய அலுவலர்கள், ஏனோ, தானோ என வேலை செய்கின்றனர். தரமற்ற செடிகளை வழங்குகின்றனர்.

விதையாக வழங்கினால் கூட விவசாயிகள் வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது பருவம் தவறி விட்டது. இனி செடிகள் வழங்கியும் பலனில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பேசிய விவசாயி ஒருவர், மிளகாய்ச் செடி வேண்டுமென ஆடி மாதம் மனு வழங்கினேன். ஆனால், ஐப்பசி 15ம் தேதி செடிகளை வழங்கினர். அதை நிலத்தல் ஊன்றும் போதே உடைந்து விட்டது. ஒரு செடிகூட வளரவில்லை. இதனால், எனக்கு பெரிய நஷ்டம் என்றார்.

பின்பு, பேசிய ஆட்சியர், இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கான கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் 95 மெ.டன் மட்டுமே நடந்துள்ளது. எனவே, கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென விஜயமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.

மானாவாரிப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை சரிவர நிறுவனங்கள் வழங்குவதில்லை. செயற்கைகோள் மூலம் பயிர்களை ஆய்வு செய்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால், நன்கு பயிர்கள் வளர்ந்து இடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சேதமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார்.

அப்போது பேசிய ஆட்சியர், இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் நடத்தி கோரிக்கை சரி செய்யப்படும் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரி அனைத்து விவசாயிகளும் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories