தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை : விவாதங்கள் என்ன நடக்க போகுதோ.?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அபலமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.’

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை நம்பி மகளை விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை. பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் மது சிகரட் விற்பனைக்கு ஒரு தலை பட்சமாக எடுக்கபடுகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மது சிகரட் விற்பனைக்கு தடை விதிக்க சட்டமன்றத்தில் இன்று வரையில் யாரும் பேசியது இல்லை.
மதுவிற்பனை முடிவு என்பது ஒருதலை பட்மாகாக எடுக்கப்பட்ட முடிவு என பொது மக்களால் கருதபடுகிறது.

மதுவை ஒழித்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்கிறார்கள்.இலவசங்களை நிறுத்தினாலே இந்த இழப்பை ஈடுசெய்ய முடியும் என பலர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசாங்கம் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறது.

பொது மக்கள் நலன் கருதி பொது நல வழக்கு போட்டால் நீதிமன்றம் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என கூறி மது விற்பனைக்கு தடை விதிக்க மறுக்கிறது .

தமிழகத்தில், ‘பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.’சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்து உள்ளார். தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், தமிழகம் முழுவதும், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, அ.தி.மு.க., தவிர்த்து, மற்ற கட்சிகள் சார்பில், தீவிர போராட்டம் நடந்தது.

மொபைல் போன் டவர் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட, காந்தியவாதி சசிபெருமாள் மரணம், போராட்டத்தை தீவிரப்படுத்தியது.பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பு தொடர்பாக, காங்., தலைவர் இளங்கோவன் கூறிய, சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, நடந்து வந்த போராட்டத்தின் வீரியம் குறைந்தது.

இந்த நிலையில் இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது.

கவன ஈர்ப்பு தீர்மானம்சட்டசபை கூடியதும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், சசிபெருமாள் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, வலியுறுத்தியும், தி.மு.க., – மார்க்.கம்யூ., – இ.கம்யூ., – காங்., – புதிய தமிழகம் கட்சி சார்பில், கவனஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, எதிர்க்கட்சிகள் பேச முற்பட்டபோது, ‘மானிய கோரிக்கையின் போது பேசுங்கள்’ என, சபாநாயகர் தெரிவித்தார். எனவே, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை, இன்று நடைபெற உள்ளது.

என்ன முடிவுஇன்றைய கூட்டத்தில், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பேச உள்ளனர். அதற்கு பதிலளிக்க உள்ள, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கு பிரச்னையில், அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதையும் தெரிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மானிய கோரிக்கையில் விவாதங்கள் என்ன நடக்க போகுதோ.?

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories