தீவிரவாதத்தை ஒழிக்க சிரியா அரசை ஆதரிப்பது ஒன்றே வழி: ரஷ்ய அதிபர் விளாடிமிர்

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து கூறியுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது

கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிரியாவுக்கு போர் ஆலோசகர்களையும், ஆயுதங்களையும், வீரர்களையும் அனுப்பி வைத்திருக்கும் ரஷ்யாவின் நடவடிக்கையானது அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பாடுபட்டுவரும் உலக நாடுகளின் முயற்சிகளை சீர்குலைப்பதாக அமைந்துவிடும்.

இந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே தோல்வியை சந்தித்துவரும் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை காப்பாற்றி விட முடியாது. ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கையானது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது என ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில்தான் சிரியா அரசுக்கு ஆயுதங்களை அளித்து, ஆதரித்து வருவதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள புதின், ‘அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க வேண்டுமா?, எப்போது இறக்க வேண்டும்? என்பதை சிரியா நாட்டின் மக்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

அதைவிடுத்து, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை அழிக்க எடுக்கப்படும் எந்த முயற்சியாக இருந்தாலும், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டது போன்ற மோசமான சூழ்நிலையை உண்டாக்கி விடும் என நான் நம்புகிறேன். அங்கு அரசின் அனைத்து துறைகளும் சீர்குலைந்துப்போய் உள்ளன. ஈராக்கிலும் இதேநிலை தான் நீடிக்கின்றது.

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது. அதேவேளையில், எதிர்ப்பாளர்களுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி, சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.’ என்று கூறினார்.

சிரியாவில் ரஷ்யப் படைகளின் தலையீடு அதிகமாக உள்ளதே,,? இது அதிபர் பஷர் அல் ஆசாத்தை மீட்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், ‘உங்கள் யூகம் சரிதான்’ என்று தெரிவித்தார்.

சொந்தநாட்டு மக்களை மிககொடூரமாக நடத்திய அதிபர் ஆசாத்தின் அணுகுமுறைதான், சிரியாவில் உள்நாட்டுப் போரையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற இயக்கத்தையும் உருவாக்கி விட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையில் புதின் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories