சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை இலங்கையில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இலங்கையை சேர்ந்த சுரேஷ் வைத்து இருந்த டீ தூள் பாக்கெட்டுகள் குறித்து கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் டீ தூள் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். அதில் தலா 100 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
மொத்தம் 1 கிலோ தங்கம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். தங்கம் யாருக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று சுரேசை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


