சென்னை புழல் சிறையில் சிறை அதிகாரி குமார் மற்றும் வார்டன் மாரி ஆகியோரை கைதிகள் சிறைபிடித்து வைத்தனர்.
உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்த கைதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையை அடுத்து கைதிகள் சிறை அதிகாரிகளை விடுவித்ததாக சிறை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


