கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி. மு.க.,வில் இணைந்தனர்.
திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., வைச் சேர்ந்த சேகர் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடலுார் தொகுதி அருண்மொழிதேவன் எம்.பி., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன், சத்தியராஜ், மங்களூர் ஒன்றிய துணைச் சேர்மன் அன்னக்கிளி குணசேகர், சிறுமுளை முத்துராமன், ஒன்றிய ஜெ., பேரவை இணைச் செயலர் விஜயமகேந்திரன், கிளை நிர்வாகிகள் பெருமாள், பொன்னுசாமி, கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
அ.தி.மு.க.,வில் மாற்றுக் கட்சியினர் பலர் ஐக்கியமாவதால் அந்த மாவட்டத்தில் பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் இன்னும் பலர் அ.தி.மு.க.,வில் விரைவில் இணைய கூடும் என பேசப்படுகிறது.


