இலங்கை அதிபர் சிறிசேனாவை அமெரிக்காவில் சந்தித்த பிரதமர் மோடி

Published:

ஐ.நா. சபையின் 70–வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.நிகழ்ச்சியின் இடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவையும் சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.

இதுகுறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘‘தலைவர்கள் சந்திப்பின் போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வந்திருந்தார்.அப்போதும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக அதிபர் சிறிசேனா நடத்தி முடித்ததற்கு அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது இலங்கை கொண்டுள்ள நம்பகத்தன்மை வெளிப்பட்டுள்ளது என்று அவர் புகழாரம் சூட்டினார். இலங்கையில் போர் நடந்த பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் அங்கு ரெயில்வே கட்டமைப்பு, மின் திட்டங்கள், வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 37 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் கவுன்சில் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.ஐ.நா. சபை கூட்டத்தில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இது சர்வதேச சமூகத்திடம் இருந்து நம்பிக்கையை பெற தூண்டுதலாக இருக்கும்’’ என்றார். தற்போது உலகின் முக்கிய பிரச்சினையாக வறுமை உள்ளது. அதை 15 ஆண்டுகளில் ஒழிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img