இலங்கை அதிபர் சிறிசேனாவை அமெரிக்காவில் சந்தித்த பிரதமர் மோடி

ஐ.நா. சபையின் 70–வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.நிகழ்ச்சியின் இடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவையும் சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.

இதுகுறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘‘தலைவர்கள் சந்திப்பின் போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வந்திருந்தார்.அப்போதும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக அதிபர் சிறிசேனா நடத்தி முடித்ததற்கு அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது இலங்கை கொண்டுள்ள நம்பகத்தன்மை வெளிப்பட்டுள்ளது என்று அவர் புகழாரம் சூட்டினார். இலங்கையில் போர் நடந்த பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்தியா சார்பில் அங்கு ரெயில்வே கட்டமைப்பு, மின் திட்டங்கள், வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 37 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் கவுன்சில் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.ஐ.நா. சபை கூட்டத்தில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இது சர்வதேச சமூகத்திடம் இருந்து நம்பிக்கையை பெற தூண்டுதலாக இருக்கும்’’ என்றார். தற்போது உலகின் முக்கிய பிரச்சினையாக வறுமை உள்ளது. அதை 15 ஆண்டுகளில் ஒழிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories