துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ மரணம் அடைந்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்பு !

Published:

துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல் நிலை நேற்று திடீர் என்று மோசம் அடைந்து கவலைக்கிடமாகவும் இருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு சோ ராமசாமி மரணம் அடைந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவியது.

இதே தகவலை நடிகை குஷ்பும் அவரது ட்விட்டர் பக்கத்தில்,” சோ ராமசாமி அவர்கள் இறந்துவிட்டார். அவருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று வெளியிட்டார்

இதை பார்த்த பலரும் குஷ்புக்கு, சோ நலமாக இருப்பதாக ட்வீட் மூலம் கூறியுள்ளனர்.பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டோம் என்று உணர்ந்த குஷ்பு, அதற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img