துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல் நிலை நேற்று திடீர் என்று மோசம் அடைந்து கவலைக்கிடமாகவும் இருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு சோ ராமசாமி மரணம் அடைந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவியது.
இதே தகவலை நடிகை குஷ்பும் அவரது ட்விட்டர் பக்கத்தில்,” சோ ராமசாமி அவர்கள் இறந்துவிட்டார். அவருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று வெளியிட்டார்
இதை பார்த்த பலரும் குஷ்புக்கு, சோ நலமாக இருப்பதாக ட்வீட் மூலம் கூறியுள்ளனர்.பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டோம் என்று உணர்ந்த குஷ்பு, அதற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.