பெண் டி.எஸ்.பி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் தலைமறைவு

Published:

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவன் தலைமறைவாக உள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவிடம் அலைபேசியில் பேசிய திருக்கோஷ்டியூர் கோயில் ஊழியர் விஜயராகவன், சி.பி.சி.ஐ.டி., விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளார் .

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக அடிக்கடி டி.எஸ்.பி. சென்றுள்ளார். அப்போது கோயிலில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவனிடம், 29, நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் திருப்புத்துாரில் ‘பிராக்டிக்கல் டிரெய்னிங்’ பணியில் அப்போது இருந்துள்ளார். திருச்செங்கோடு சென்ற பின்னும் அலைபேசியில் அடிக்கடி விஷ்ணுபிரியாவிடம் பேசியதாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களாக விஜயராகவன் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. நான்கு நாட்களாக கோயில் பணிக்கும் செல்லவில்லை.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கூறியதாவது:
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவுடன் அடிக்கடி விஜயராகவன் பேசியது தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் பற்றி விசாரித்தோம். கடந்த 4 நாளுக்கு முன் அவர் காணாமல் போயிருப்பது தெரிந்தது. விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி., போலீசார் அழைத்து சென்றிருக்கலாம். தற்போது அவரின் அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ -ல் உள்ளது. போலீசார் தேடி வருவது தெரிந்து தலைமறைவு ஆனாரா.? என தெரியவில்லை. அவரது குடும்பத்தாரிடம் கேட்ட போது, ‘நான்கு நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் காணவில்லை. எங்களிடமும் தகவல் சொல்லவில்லை’ என தெரிவித்து விட்டனர் என்றனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img