வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் வீரபத்திரசிங் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் வீரபத்திரசிங், இவர் மீதும், மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யாசிங் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, டில்லி ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜுன் மாதம் வீரபத்திரசிங் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தி தலைநகர் ஷிம்லாவில் உள்ள முதலமைச்சரின் வீடு, அலுவலங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் நேற்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ. ரெய்டால் முதலமைச்சர்வீரபத்திரசிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


