சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதலமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

Published:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் வீரபத்திரசிங் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர்.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் வீரபத்திரசிங், இவர் மீதும், மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யாசிங் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, டில்லி ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜுன் மாதம் வீரபத்திரசிங் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தி தலைநகர் ஷிம்லாவில் உள்ள முதலமைச்சரின் வீடு, அலுவலங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் நேற்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ. ரெய்டால் முதலமைச்சர்வீரபத்திரசிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img