மத்திய அரசு இந்தியாவில் 847 ஆபாச வலைத்தளங்களை தடைசெய்ய முடிவெடுத்த போது கடும் எதிர்ப்பு காரணமாக திடீரென தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வலைத்தளங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் அனைத்து ஆபாச வலைத்தளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது.
நாட்டில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி கொண்டே வருகின்றன. பாலியல் தொடர்பான ஆபாச வலைத்தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகையை வலைத்தளங்கள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் பக்கம் இளையதலைமுறையினரை ஈர்க்கின்றன.
எனவே அனைத்து ஆபாச வலைத்தளங்கயும் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


