ரூ.13.35 லட்சம் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலை

Published:

ரூ. 13.35 லட்சம் மோசடி செய்து தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவர் மீது பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, மொரசப்பட்டியை சேர்ந்தவர் மாது மகன் விஜயகுமார், 39. இவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக ஆண்டுதோறும் சீட்டு நடத்தி, பணமாகவும், பொருளாகவும் தந்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டின் தீபாவளிக்காக சீட்டு சேர்த்துள்ளார். வாரந்தோறும் பணம் செலுத்தி, தீபாவளி பண்டிகை சமயத்தில் பணமாக பெற்று குடும்பத்தினருக்காக செலவு செய்து அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் வழக்கமாக உள்ளது.

இதை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு போட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக பணத்தை வசூல் செய்த விஜயகுமார், தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக காணாமல் போய் உள்ளார். அதனால் சீட்டு போட்டவர்கள் விஜயகுமாரை தேடியுள்ளனர். அவர் இருக்கும் இடம் தெரியாத நிலையில், சீட்டு போட்ட ஐந்து பேர் பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரில், 13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, கூறியுள்ளனர். பூலாம்பட்டி போலீசார் விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img