ரூ.5.51 லட்சம் மோசடி செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக, ரூ.5.51 லட்சம் மோசடி செய்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் விவசாயி பழனியாண்டி, 65. இவரது மகன் ராஜேஷ். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மகள் சுபாவின் கணவர் சிவக்குமார், சென்னை தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து பணிமனையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாரியப்பன், 57, என்பவரும், இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள தனது மைத்துனர் ராஜேசுக்கு வேலை வாங்க வேண்டும் என்று சிவக்குமார் கூறியுள்ளார். அதற்கு மாரியப்பன், தான் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி சிவக்குமார், தன் மாமனார் பழனியாண்டியிடம், 7 லட்சம் பெற்று, மாரியப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால், மாரியப்பன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை தொடர்ந்து 1.48 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி பணம் ரூ.5லட்சத்து. 51ஆயிரத்து. 500ஐ விரைவில் தருவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை தராததால் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பழனியாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கோரி போளூர் போலீசாருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் போளூர் போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories