ரூ.5.51 லட்சம் மோசடி செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு

Published:

திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக, ரூ.5.51 லட்சம் மோசடி செய்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் விவசாயி பழனியாண்டி, 65. இவரது மகன் ராஜேஷ். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மகள் சுபாவின் கணவர் சிவக்குமார், சென்னை தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து பணிமனையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாரியப்பன், 57, என்பவரும், இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள தனது மைத்துனர் ராஜேசுக்கு வேலை வாங்க வேண்டும் என்று சிவக்குமார் கூறியுள்ளார். அதற்கு மாரியப்பன், தான் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி சிவக்குமார், தன் மாமனார் பழனியாண்டியிடம், 7 லட்சம் பெற்று, மாரியப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால், மாரியப்பன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை தொடர்ந்து 1.48 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி பணம் ரூ.5லட்சத்து. 51ஆயிரத்து. 500ஐ விரைவில் தருவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை தராததால் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பழனியாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கோரி போளூர் போலீசாருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் போளூர் போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img