நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை யொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


