காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அவர்களே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை தங்களுடையது என்று பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்துதல், தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவிற்குள் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய செயல்களை இடைவிடாது செய்துவருகிறது.
இந்தியா திருப்பி அடிக்கும்போது, ஐ.நா. சபையில் புகார் தெரிவிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பது பாகிஸ்தானில் நெடுநாளைய விருப்பமாக உள்ளது. ஆனால், தற்போது பாகிஸ்தானின் ஆசைக்கனவில் மண் விழுந்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அவர்களே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.


