தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, தடையில்லா மின்சாரம், : தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. வளைகுடா போன்ற குறுகிய எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் செல்வது தவிர்க்க முடியாது. அதனால் வளைகுடா பகுதியை பொது எல்லையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக சட்ட மன்றத்தில் அறிவிக்கப்படும் என பொது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு வழி செய்ய வேண்டும். ஐ.நா.சபையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறாமல் போனதற்கு யார் காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திர திட்டத்துக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வருகிற 1–ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். அதற்கு மத்திய அரசு இடம் கொடுக்கக்கூடாது.

எனது சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. என்னுடைய 2–ம் கட்ட சுற்றுப்பயணம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அதன் பிறகு மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்போம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories