தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, தடையில்லா மின்சாரம், : தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. வளைகுடா போன்ற குறுகிய எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் செல்வது தவிர்க்க முடியாது. அதனால் வளைகுடா பகுதியை பொது எல்லையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக சட்ட மன்றத்தில் அறிவிக்கப்படும் என பொது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு வழி செய்ய வேண்டும். ஐ.நா.சபையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறாமல் போனதற்கு யார் காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திர திட்டத்துக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வருகிற 1–ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். அதற்கு மத்திய அரசு இடம் கொடுக்கக்கூடாது.

எனது சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. என்னுடைய 2–ம் கட்ட சுற்றுப்பயணம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அதன் பிறகு மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்போம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

Topics

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Entertainment News

Popular Categories