பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்தது. இன்று அவர் நாடு திரும்புகிறார்.
அடுத்த மாதம் (அக்டோபர்) முழுவதும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தவுள்ளார். அவர் பீகாரில் சுமார் 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு நவம்பர் மாதம் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இங்கிலாந்து நாட்டு அரசால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
குஜராத் கலவரத்துக்கு மோடியே காரணம் என்று இங்கிலாந்து கூறி இருந்தது. எனவே மோடியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நவம்பர் மாதம் 16, 17–ந் தேதிகளில் மோடி இங்கிலாந்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது ஏராளமான முதலீடுகளை ஈர்ப்பதோடு, புல புதிய ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திடுவார்.தீவிரவாதம், சுற்றுச்சூழல் தொடர்பாக அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக நவம்பர் 14, 15–ந் தேதிகளில் துருக்கி நாட்டுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அங்கு நடக்கும் ஜி–20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.