கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் இன்று முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினர்களின் காரசாரமான விவாதம், எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த வெளிநடப்பு என இந்த கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருந்தது.
இந்த கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம், கேள்வி-பதில் மற்றும் துறைவாரியாக அமைச்சர்களின் அறிவிப்புகளுடன், முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டடார். தற்போது தமிழக சட்டமன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


