ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துளது.
ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
இவை ஆப்பிள் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது சீனா உட்பட 9 நாடுகளில் மட்டுமே இந்த புதிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9-ந்தேதி இத்தாலி, மெக்ஸிகோ, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தைவான் நாடுகளில் வெளியாகிறது.
இந்தியாவில் அக்டோபர் 16-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 130 நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே வாரத்தில் 1.3 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது