டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் விழாக்காலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இளைஞர்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையசெய்ய ஐ.எஸ். தீவிரவாத சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகிறது என்றும் கடந்த சிலமாதங்களில் மட்டும் 40 வரையிலான இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்து உள்ளனர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை செய்தியை டெல்லி போலீஸ் உளவுத்துறை பிரிவு, டெல்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு உடனடியாக பரிந்துரை த்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


