மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த குழுவினர் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் அக்டோபர் 8–ந்தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை உள்ள 3.5 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது


