சட்டசபை தேர்தலில் 90 சதவீத’கிரிமினல்’கள் வேட்பாளர்களாக களத்தில் குதிப்பு

Published:

 

சாமானிய மக்களுக்கும் சரிசமமான உரிமைகளும் சுயமரியாதையும் கிடைக்க வேண்டும்.என்பதற்காகத் தான் ஜனநாயகத்தையே நமது முன்னோர்கள் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது ‘கிரிமினல்’களின் கையில் சிக்கிக்கொண்டு ஜனநாயகம் படாதபாடு படுகிறது என்பதற்கு உதாரணம் தான் பீகார் மாநிலம்.

நடக்க இருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் களம் இறங்கி உள்ள வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் மீது ‘கிரிமினல்’ வழக்குகள் உள்ளன. அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடக்கப்போகும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ‘கிரிமினல்’கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

மொத்த வேட்பாளர்களில் 99 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் 30 பேர் மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img