பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் : வைகோ

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:–

ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே அமையும்.

இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் ஒன்றுக்குகொன்று முரண்பாடான கொள்கைகளை கொண்டதாகும். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்த நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் நீதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நீதி குலைக்கப்பட்டு உள்ளது. இதை வெளியே கொண்டு வர தமிழர்கள் முன் வர வேண்டும்.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தனது தவறுகளை மறைக்கவே இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கைக்கு ஆயுத உதவிகளும், தளவாட பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் வாய் திறக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் இலங்கை பிரச்சினையில் அறிக்கை விட்டு வருகிறார்கள்.

அப்போதே தி.மு.க. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்திருப்போம். இதனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 10 லட்சம் இளைஞர்களை திரட்ட உள்ளேன்.

திருவாரூரில் வருகிற 5–ந் தேதி மக்கள் நலன் நாடும் கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories