பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் : வைகோ

Published:

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:–

ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே அமையும்.

இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் ஒன்றுக்குகொன்று முரண்பாடான கொள்கைகளை கொண்டதாகும். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்த நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் நீதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நீதி குலைக்கப்பட்டு உள்ளது. இதை வெளியே கொண்டு வர தமிழர்கள் முன் வர வேண்டும்.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தனது தவறுகளை மறைக்கவே இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கைக்கு ஆயுத உதவிகளும், தளவாட பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் வாய் திறக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் இலங்கை பிரச்சினையில் அறிக்கை விட்டு வருகிறார்கள்.

அப்போதே தி.மு.க. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்திருப்போம். இதனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 10 லட்சம் இளைஞர்களை திரட்ட உள்ளேன்.

திருவாரூரில் வருகிற 5–ந் தேதி மக்கள் நலன் நாடும் கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img