பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது .
தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் பிரசார சார்பாக பல மாவட்டங்களில் பேரணி தொடர்ந்து நடத்த திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.
இந்த பேரணி கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையிலான குழுவினர் வேன் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று மாலை நெல்லை வந்த அந்த பேரணியில் பங்கு பெற்ற
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்த பல அரசியல் கட்சிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இந்த நிலையில் கள் ஒரு போதை பொருள் அல்ல. அது ஒரு உணவு பொருள். சுத்தமான கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் நாங்கள் ரூ.10 கோடி பரிசாக தருகிறோம்.
கேரளாவில் சுண்ணாம்பு சேர்க்காத பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கின்றனர். பனைக்கு யாரும் பூச்சி மருந்து அடிப்பதில்லை. எனவே பனை பொருட்களில் எந்த வித நச்சும் இல்லை. அது கிலோ ரூ.400க்கு விற்பனையாகிறது. மேலும் இலங்கையில் இருந்து கள் மூலம் தயாரித்த பீர், ஒயின், விஸ்கி ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கள் இறக்க அனுமதித்தால் அதுபோல் நாமும் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியசெலவானி ஈட்டலாம்.
கன்னியாகுமரியில் இன்று தொடங்கிய எங்கள் பிரசார பயணம் வருகிற அக்டோபர் 2–ந் தேதி சென்னை காந்தி சிலை முன்பு நிறைவு பெறுகிறது. அப்போது காந்தி சிலைக்கு கள் படையல் செய்து வழிபடுவோம் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்.
கள் இயக்க பிரசாரத்தின் போது பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மூலம் வெளிநாடுகளில் தாயரிக்கப்பட்டு விற்பனையாகும் பீர், ஒயின், விஸ்கி பாட்டில்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது .


