தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல்! அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்!

modi video conference1 - 2026

வீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்! அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.!

சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று உரை நிகழ்த்தினார்.

இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்தில் பிருந்தாவன் மண்டபத்திலும், ஊட்டி ஒய்.எம்.பி.ஏ.,மகாலிலும் மற்றும் நாமக்கல் கவின்மஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.

modi video conference2 - 2026

முதலில் அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி தமிழ் நாட்டின் சிறப்பு, தமிழின் சிறப்புக்களை விவரித்து பேசினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

முதலில் கோவை மாவட்டத்தினரை பேச அழைத்தார். அதற்கு முன்பு தேசத்தில் கோவை மாவட்டத்தின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்தினரையும் பேச அழைத்தார். அனைவரும் தாங்கள் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய விஷயங்கள் குறித்தும், சில திட்டங்கள் குறித்த சந்தேகங்களையும் கேட்டனர்.

5 மாவட்டத் தலைவர்களும் பிரதமரிடம் பேசினர். அப்போது பதிலளித்த மோடி அவர்கள் வரும் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சி வளர்ச்சிபணிகள், வரும் 2019 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு தொழில்துறையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது. 3 மாதங்களில் 5 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிகளவில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் பிரதம மந்திரி யோஜனா, முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது…

modi video conference3 - 2026

வடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால், தேசம் வளர்ச்சி பெறும். நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பண வீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது,தற்போது, கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12000 கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கழிப்பிடத் திட்டங்களை நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் முந்தைய 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமப்புற சாலைகளை விட பா.ஜ.க-வின் நாலரை ஆண்டுகளில் கூடுதலாக 1300 கிலோமீட்டர் அமைக்கப்பட்டதாக கூறினார். அதேபோல, இந்த மாநிலத்தில் மட்டும் 27 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா கடன் திட்டத்தை அதிக அளவில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டது என்றும் பக்கா வீடுகள் திட்டத்தில் மட்டும் நான்கு இலட்சத்து முப்பதினாயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.

மூத்த குடிமக்களுக்கு செய்துவரும் பல திட்டங்கள் குறித்து குறிப்பிட்டார். அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்கள், மலிவு விலை மருந்து கடைகள் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவான விலையில் வழங்கும் திட்டம், ஏழைகளுக்கான இலவச டயலசிஸ் திட்டங்கள், ஜி.எஸ்.டி மூலம் பாதிப்பு இல்லாமல் நடுத்தர மக்களை காப்பாற்றியது, அரிசி பருப்பு விலைகளை விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது, விவசாயிகளுக்கு ₹300 விலையில் யூரியா வழங்குவது ஆகிய பல திட்டங்களை பற்றி எளிமையாக விவரித்த மோடி, இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்குமாறும் அவர்களையும் நம் தேச தொண்டின் பங்குதாரர்களாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

தகவல்: R.V. ஐயப்பன், குமாரபாளையம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories