கோவை சிறுமி கொலையில்… கொலையாளியின் டீஷர்ட் காட்டிக் கொடுத்ததாம்! போலீஸார் தகவல்!

coimbatore girl murdercase - 2026

தமிழகத்தையே உலுக்கிய கோவை துடியலூர் P.S 7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவை மாவட்ட போலீஸார் அதிரடி விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் அளித்த தகவல்:

கோவை மாவட்டம் துடியலூர் அருகில் பன்னிமடை என்னும் கிராமத்தில் 25.03.2019 ம் தேதி மாலை 1800 மணிக்கு தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போய் விட்டாள். இது தொடர்பாக அன்று இரவே துடியலூர் கா.நி வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் அடுத்த நாள் அச்சிறுமியின் வீடு அருகே சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒரு துப்பும், தடயமும் கிடைக்காத நிலையில் பல்வேறு அமைப்புகள் காவல் துறையை கண்டித்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீஸ் உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், 10 தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறுமி கொலை வழக்கில் எவ்விதமான தடயமோ, CCTV காட்சிகள் ஏதும் இல்லாத மிகவும் சிக்கலான இந்த கொலை வழக்கில் தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் சிறுமியின் உறவினர்கள், நண்பர்கள், அடுத்த வீட்டில் இருப்பவர்கள் என பல்வேறு இடங்களில் இடங்களில் விசாரணை மேற்கொண்டதின் பலனாக தனிப்படையினருக்கு கிடைத்த ஒரு சிறு தடயத்தை ( சிறுமியின் பிணம் சுற்றி வைக்கப்பட்ட குற்றவாளியின் TShirt) வைத்து சிறுமியின் வீட்டுக்கு அருகில் அடிக்கடி வந்து செல்லும் Santhosh kumar (34) S/o. Kanagaraj, Thondamuthur, Covai.என்பவனை பற்றிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்படையினர் அவனை கண்காணித்து வந்து ஓரிடத்தில் இருந்து பிடித்து இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

அதில் தனக்கு திருமணமாகி ஆகி விட்டதாகவும் தனக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சம்பவத்தன்று தான் மது அருந்தி விட்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்று தனது Cellphoneல் ஆபாசம் படம் பார்த்து கொண்டிருந்த போது தனது பாட்டியின் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு பாட்டியின் வீட்டில் பழைய பொருட்கள் உள்ள இடத்தில் சிறுமியின் உடலை மறைத்து வைத்து விட்டு தான் வெளியே சென்று விட்டு வந்த போது தனது பாட்டி வீட்டில் இரந்து விட்டதாகவும் தனது பாட்டியின் வீடு சிறியதாக இருந்தால் உறவினர்கள் வந்து பார்க்க வேண்டி பாட்டியின் உடலை வெளியே எடுத்து வைத்து விட்டு அனைவரும் வந்த பிறகு பாட்டியின் உடலை அடக்கம் செய்து விட்டு தான் தனது பாட்டியின் வீட்டுக்கு வந்து பாட்டியின் பழைய பொருட்களை வெளியே கொண்டு போய் போடுவது போல சிறுமியின் உடலை ஒரு T Shirt துணியால் சுற்றி சிறுமி வீட்டின் பக்கத்தில் உள்ள குறுகிய சந்தில் கொண்டு போய் போட்டு விட்டு யாருக்கும் சந்தேகம் வராத போல நடந்து கொண்டதாக கூறினான்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தனிப்படையினரின் தொடர் விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். எந்த ஒரு CCTV பதிவுகளோ, சாட்சியங்களோ, தடயங்களோ இல்லாத இந்த வழக்கில் தொடர் விசாரணையின் மூலம் குற்றவாளியை கண்டு பிடித்து கைது செய்து தமிழக காவல் துறைக்கு இந்திய அளவில் கோவை மாவட்ட போலீஸார் பெருமை சேர்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories