February 22, 2026, 4:23 AM
25.6 C
Chennai

இணையதளம் வாயிலாக 98% ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை: (ஐ.ஆர்.சி. டி.சி.)தீவிரம்..!

E.TRIAN - 2026

இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் ரயில் பயணச்சீட்டு விற்பனையை 70 சதவீதத்தில் இருந்து 98 சதவீதமாக அதிகரிக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக, நவீன கால பயணச்சீட்டு முறை மென்பொருளை பயன்படுத்த முயற்சி எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி. வசம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைக்கக் கூடாது என்று ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ரயில்வே பொதுத்துறை நிறுவனம்: இந்தியன் ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) உள்ளது.

இந்த நிறுவனம் ரயில்வேயில் உணவு, சுற்றுலா, இணையதள பயணச்சீட்டு முன்பதிவு ஆகியவற்றை கையாளுகிறது.

deatta 1 - 2026

இதில், இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது.

2015-ஆம் ஆண்டில் 3 கோடி பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பதிவு செய்து பயன்படுத்தினர்.

தினசரி சராசரியாக 6 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தனர்.

இது படிப்படியாக உயர்ந்து வந்தது.
ரூ.32,069 கோடி வருவாய்: தற்போது, விரைவு ரயில், சிறப்பு ரயில்கள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள பயணிகள் பெரும்பாலோர் இணையதளம் மூலம் பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.

ஐ.ஆர்.சி.டிசி. நிறுவனம் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் 28.41 கோடி குறுஞ்செய்தி மற்றும் இ.டிக்கெட்டுகளை ரயில் பயணத்துக்காக வழங்கியது.

ELACREK TRIAN - 2026

இதன் மூலம், 49 கோடியே 49 லட்சம் பேர் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் பயணச்சீட்டுகள் விற்பனையால் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,069 கோடி வருவாய் கிடைத்தது.

இதுதவிர, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் 10 கோடியே 18 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர்.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக, பயணச்சீட்டு முன்பதிவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பயணச்சீட்டு விற்பனையை உயர்த்த திட்டம்: இந்நிலையில், இணையதளம் வாயிலான ரயில் பயணச்சீட்டு விற்பனையை 70 சதவீதத்தில் இருந்து 98 சதவீதமாக அதிகரிக்க ஐ.ஆர்.சி.டி.சி. தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்காக, நவீன கால பயணச்சீட்டு முறை என்ற மென்பொருளை பயன்படுத்த முயற்சி எடுத்துள்ளது.

MANI 2 1 - 2026

இந்நிலையில், இதை ஐ.ஆர்.சி.டிசி. வசம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைக்கக் கூடாது என்று ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மென்பொருளை ஒப்படைக்கக் கூடாது: இது குறித்து தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறியது:

ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது பயணச் சீட்டு விற்பனையை 98 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ரயில்வே வசம் உள்ள 30 சதவீத நேரடி கவுன்ட்டர்கள் விற்பனையை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ரயில்வேயின் தகவல் அமைப்பு மையம் (கிரிஸ்) முன்பதிவுக்கு கையாளும் நவீன கால பயணச் சீட்டு முறை என்ற மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளது.

meto trian 2 - 2026

இந்த மென்பொருள் துணையோடு இணையதள முன்பதிவு வேகத்தை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அதிகரிக்கவோ, ரயில்வே கவுன்ட்டர்களில் முன்பதிவு வேகத்தை குறைக்கவோ முடியும்.

இணையதளம் வேகத்தை ரயில்வே கவுன்டர்களில் குறைத்தால், தத்கல் மற்றும் முன்பதிவு தொடங்கும் நாளில் முன்பதிவு செய்வதற்கு ரயில்வேயை பயணிகள் அணுக மாட்டார்கள்.

ஒருசில சலுகை கட்டண முன்பதிவுக்கு மட்டும் ரயில்வே கவுன்டர்கள் இயங்கும் சூழல் உருவாகும்.

இதனால், ரயில்வே பயணச்சீட்டு விற்பனையாளர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

எனவே, இணைய தள டிக்கெட் விற்பனையை அதிகப்படுத்த இந்த மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி. வசம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைக்க கூடாது என்றார் அவர்.

பயணிகள் தேவை பூர்த்தி செய்யப்படும்: இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இணையதளம் வாயிலாக பயணச் சீட்டு முன்பதிவுக்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்து வருகிறது.

T.T.SAGUNTHALA - 2026

ஒரு நிமிடத்துக்கு சராசரி ரூ.24 ஆயிரம் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன.

பயணிகள் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றார் அவர்.

மொத்த பயணச் சீட்டு விற்பனையில் 20 சதவீதம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் நடைபெறுகின்றன.

சட்டவிரோத தரகர்கள் முன்பதிவில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி நாடு முழுவதும் 205 நகரங்களில் நடைபெற்ற சோதனைகளில் 387 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

TRIAN R - 2026

ரூ.36.92 லட்சம் மதிப்பிலான பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன. 2,564 போலி ஐ.டி.க்கள் செயல் இழக்கம் செய்யப்பட்டன.

ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் மட்டும் 24.66 கோடி குறுஞ்செய்தி மற்றும் இ.டிக்கெட்டுகளை ரயில் பயணத்துக்காக வழங்கியது.

இது கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் 28.41 கோடி குறுஞ்செய்தி மற்றும் இ.டிக்கெட்டுகளாக உயர்ந்தது.

RS R - 2026

இணையதளம் டிக்கெட் மூலமாக பதிவு செய்து, ரயில்களில் 2018-19-ஆம் ஆண்டில் மொத்தம் 49 கோடியே 49 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.

2017-18-ஆம் ஆண்டில் 43 கோடியே 40 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.

இணையதள பயணச் சீட்டு விற்பனை மூலமாக 2017-18-ஆம் ஆண்டில் ரூ.28,475 கோடி வருவாய் கிடைத்தது.

TRIAN 2 - 2026

இது 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,069 கோடியாக உயர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories