சேவை புரிவது தான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கம்! இஸ்ரோ இணை இயக்குனர்!

Published:

isro 2 - 2026

இஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்2022 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என இஸ்ரோவின் இணை இயக்குநர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஐ எஸ் ஆர் ஓ எஸ்பிபியின் இணை இயக்குனர் ரெங்கநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, உலக விண்வெளி வாரம் கடந்த 4ஆம் தேதி முதல் நாளை வரை நடைபெறுவதாகவும், இது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என 3 மாநிலங்களில் மட்டும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

isro - 2026

விண்வெளி ஆய்வு என்பது சாதாரண அன்றாட மனித வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்ற தவறான கருத்து நிலவுகிறது. அது அப்படியல்ல கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களின் உடல் வெப்பத்தைக் கூட துல்லியமாக நம் விண்வெளிக்கழகத்தின் செயல்பாடு மூலம் அறிய முடியும்.

கடலின் எப்பகுதியில் மீன் வளம் மிகுந்துள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க முடியும். நாட்டின் பயிர் வளம் எப்படி உள்ளது எப்பகுதியில் எந்த தானியம் எவ்வளவு மகசூல் அளிக்கும் என்பதை கூட கணித்து அரசுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த முடியும். இப்படிபல்வேறு துறைக்கும் எல்லை இல்லா சேவை புரிவது தான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார். என்று தெரிவித்தார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இஸ்ரோவின் அடுத்த திட்டமான 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாகவும், தற்போது இந்திய எல்லைகளை பாதுகாத்திடும் வகையில் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளது” என்றும்தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசியசட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், இரண்டு நாட்கள் நடைபெறும் விண்வெளி வார விழா கண்காட்சியினை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, அனைத்துபள்ளி மாணவ, மாணவிகள் பார்ப்பதற்கு அவகாசம் தர வேண்டும் எனஇஸ்ரேலின் இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

Related articles

Recent articles

spot_img