வியாழக்கிழமைதோறும் டெங்கு ஒழிப்பு தினம்; சுகாதாரத்துறை அதிரடி.!

Dengu 2 - 2026

வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று தமிழக சுகதாரத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை கட்டு படுத்த நாளை முதல் டெங்கு ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்க ளிலும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தினசரி டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் மரணம் அடைந்து வருவதும் நிகழ்ந்து வருகிறது.

DENGU DAY - 2026

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த தமிழகஅரசு முழு மூச்சில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் டெங்கு ஒழிப்பு நாள் அனுசரிக்கப் படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் கார்ப்பரேஷன் பணியாட்கள் மூலம் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை கண்காணிப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதையடுத்து வெள்ளிக்கிழமைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டும், இதுபோல ஒவ்வொரு வியாழக் கிழமைகளில் கொசு ஒழிப்பு நாள் அறிவிக்கப்பட்டது.

தற்போது அதே அறிவிப்பு மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories