வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் உணவுத்துறை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வெங்காயம் வருகிற 15-ந்தேதி முதல் டிசம்பர் 15 வரை நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படும்’ மேலும் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வெங்காயத்தை விநியோகிக்கும் பொறுப்பை நாஃபெட் ஒப்படைத்துள்ளது,. என்று குறிப்பிட்டுள்ளார்.
सरकार ने प्याज की कीमतों को नियंत्रित करने के लिए 1 लाख टन प्याज के आयात का फैसला लिया है। MMTC 15 नवंबर से 15 दिसंबर के बीच आयातित प्याज देश में वितरण के लिए उपलब्ध कराएगा और NAFED को देश के हर हिस्से में प्याज का वितरण करने की जिम्मेदारी सौंपी गई है। #Onion @PMOIndia pic.twitter.com/O8KuaaO2la
— Ram Vilas Paswan (@irvpaswan) November 9, 2019