போலிஸ் வாகனத்தின் முன்னே மாணவர்கள் செய்த டிக்டாக்! காவல்துறை அளித்த விநோத தண்டனை!

police students - 2026

தூத்துக்குடியில் வாகன பழுதுபார்க்கும் கடையின் முன்பு நிறுத்தியிருந்த காவல்துறையின் டெம்போ வாகனத்தின் மீது ஏறி, 3 இளைஞர்கள் `டிக் டாக்’ வீடியோ பதிவிட்டனர்.

அதில், “தூக்கிட்டானுங்கம்மா… நம்ம தூத்துக்குடி பசங்க, ரொம்ப மோசமானவனுங்க, ரோடுன்னா ரோடுதான்…” என்ற நடிகர் விஜய் பேசும் வசனத்துக்குதான் டெம்போ மீது அமர்ந்து டப்ஸ்மாஷ் செய்தனர்.

tik tok 1 - 2026

வசனத்தைத் தொடர்ந்து கீழே குதிக்கும் அவர்கள், “பத்து பேரு சுத்தி வளைச்சாலும் எங்க பலம் குறைஞ்சதில்ல…” என்ற வசனத்துக்கு நின்றபடி டப்ஸ்மாஷ் செய்கின்றனர். 14 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ வைரலாகப் பரவியது.

tik tok - 2026

இந்நிலையில், டப்ஸ்மாஷ் செய்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கண்டுபிடித்து அவர்களைத் தென்பாகம் காவல்நிலைய காவல்துறை விசாரணை செய்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்தை காலை முதல் மாலை வரை ஒழுங்கு செய்யும் நூதன தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கூறுகையில், “காவல்துறை வாகனத்தின் மீது ஏறி டிக் டாக் வீடியோ எடுத்த அந்த மூன்று பேரையும் விசாரணை செய்ததில், தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர்.

tik tok 2 - 2026

காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக டப்ஸ்மாஷ் வீடியோ பதிவிட்ட அந்த மூன்று பேரையும், காலை முதல் மாலை வரை 8 மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம்.

அத்துடன், இனிமேல் இதுபோல விளையாட்டாக எதுவும் செய்யக் கூடாது என எச்சரித்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ளது தண்டனை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி. அத்துடன் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும். தவற்றை உணர்ந்ததால் வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை” என்றார்.

tiktok - 2026

இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் அவர்கள் மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அளிக்கப்பட்ட நூதன தண்டணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories