போலிஸ் வாகனத்தின் முன்னே மாணவர்கள் செய்த டிக்டாக்! காவல்துறை அளித்த விநோத தண்டனை!

police students - 2026

தூத்துக்குடியில் வாகன பழுதுபார்க்கும் கடையின் முன்பு நிறுத்தியிருந்த காவல்துறையின் டெம்போ வாகனத்தின் மீது ஏறி, 3 இளைஞர்கள் `டிக் டாக்’ வீடியோ பதிவிட்டனர்.

அதில், “தூக்கிட்டானுங்கம்மா… நம்ம தூத்துக்குடி பசங்க, ரொம்ப மோசமானவனுங்க, ரோடுன்னா ரோடுதான்…” என்ற நடிகர் விஜய் பேசும் வசனத்துக்குதான் டெம்போ மீது அமர்ந்து டப்ஸ்மாஷ் செய்தனர்.

tik tok 1 - 2026

வசனத்தைத் தொடர்ந்து கீழே குதிக்கும் அவர்கள், “பத்து பேரு சுத்தி வளைச்சாலும் எங்க பலம் குறைஞ்சதில்ல…” என்ற வசனத்துக்கு நின்றபடி டப்ஸ்மாஷ் செய்கின்றனர். 14 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ வைரலாகப் பரவியது.

tik tok - 2026

இந்நிலையில், டப்ஸ்மாஷ் செய்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கண்டுபிடித்து அவர்களைத் தென்பாகம் காவல்நிலைய காவல்துறை விசாரணை செய்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்தை காலை முதல் மாலை வரை ஒழுங்கு செய்யும் நூதன தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கூறுகையில், “காவல்துறை வாகனத்தின் மீது ஏறி டிக் டாக் வீடியோ எடுத்த அந்த மூன்று பேரையும் விசாரணை செய்ததில், தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
tik tok 2 - 2026

காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக டப்ஸ்மாஷ் வீடியோ பதிவிட்ட அந்த மூன்று பேரையும், காலை முதல் மாலை வரை 8 மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம்.

அத்துடன், இனிமேல் இதுபோல விளையாட்டாக எதுவும் செய்யக் கூடாது என எச்சரித்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ளது தண்டனை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி. அத்துடன் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும். தவற்றை உணர்ந்ததால் வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை” என்றார்.

tiktok - 2026

இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் அவர்கள் மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அளிக்கப்பட்ட நூதன தண்டணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories