December 5, 2025, 11:48 PM
26.6 C
Chennai

போலிஸ் வாகனத்தின் முன்னே மாணவர்கள் செய்த டிக்டாக்! காவல்துறை அளித்த விநோத தண்டனை!

police students - 2025

தூத்துக்குடியில் வாகன பழுதுபார்க்கும் கடையின் முன்பு நிறுத்தியிருந்த காவல்துறையின் டெம்போ வாகனத்தின் மீது ஏறி, 3 இளைஞர்கள் `டிக் டாக்’ வீடியோ பதிவிட்டனர்.

அதில், “தூக்கிட்டானுங்கம்மா… நம்ம தூத்துக்குடி பசங்க, ரொம்ப மோசமானவனுங்க, ரோடுன்னா ரோடுதான்…” என்ற நடிகர் விஜய் பேசும் வசனத்துக்குதான் டெம்போ மீது அமர்ந்து டப்ஸ்மாஷ் செய்தனர்.

tik tok 1 - 2025

வசனத்தைத் தொடர்ந்து கீழே குதிக்கும் அவர்கள், “பத்து பேரு சுத்தி வளைச்சாலும் எங்க பலம் குறைஞ்சதில்ல…” என்ற வசனத்துக்கு நின்றபடி டப்ஸ்மாஷ் செய்கின்றனர். 14 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ வைரலாகப் பரவியது.

tik tok - 2025

இந்நிலையில், டப்ஸ்மாஷ் செய்த தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கண்டுபிடித்து அவர்களைத் தென்பாகம் காவல்நிலைய காவல்துறை விசாரணை செய்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்தை காலை முதல் மாலை வரை ஒழுங்கு செய்யும் நூதன தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கூறுகையில், “காவல்துறை வாகனத்தின் மீது ஏறி டிக் டாக் வீடியோ எடுத்த அந்த மூன்று பேரையும் விசாரணை செய்ததில், தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர்.

tik tok 2 - 2025

காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக டப்ஸ்மாஷ் வீடியோ பதிவிட்ட அந்த மூன்று பேரையும், காலை முதல் மாலை வரை 8 மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம்.

அத்துடன், இனிமேல் இதுபோல விளையாட்டாக எதுவும் செய்யக் கூடாது என எச்சரித்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ளது தண்டனை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி. அத்துடன் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும். தவற்றை உணர்ந்ததால் வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை” என்றார்.

tiktok - 2025

இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் அவர்கள் மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அளிக்கப்பட்ட நூதன தண்டணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories