December 5, 2025, 9:40 PM
26.6 C
Chennai

ஆபரேஷன் தியேட்டரில் பிறந்த குழந்தையை கடித்துக் கொன்ற நாய்! உபி மருத்துவமனையில் அலட்சிய போக்கு!

delivery - 2025

ஊழியர்களின் அலட்சியத்தால் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த நாய் ஒன்று புதிய – பிறந்த குழந்தை ஒன்றைக் கடித்துக்கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் உ.பியில் நேற்று நடந்துள்ளது.

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய இக்கோர சம்பவத்தை அடுத்து இம்மருத்துவமனைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள் அன்று ரவிக்குமார் என்பவர் தனது மனைவி காஞ்சனாவை பிரசவத்திற்காக சதர் கோட்வாலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அங்கு அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் சி பிரிவுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக மருத்துவஊழியர்கள் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

baby - 2025

அதன்பின் காஞ்சனாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு, காஞ்சனா வார்டு பகுதிக்கு மாற்றப்பட்டார், ஆனால் குழந்தையை பின்னர் மாற்றுவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் நடந்த சம்பவங்கள்தான் பிறந்த புதிய குழந்தையை விதியை மாற்றி எழுதும்படி நேர்ந்தது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை இந்த உலகத்தைக் காண இரண்டுமணிநேரம்கூட உயிரோடு இல்லை.

மருத்துவமனைக்கு வெளியே இருந்து ஒரு நாய் மருத்துவமனைக்குள் நுழைந்ததை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் அந்த நாய் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளும் சென்றது. ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஒரு நாயை விரட்ட மருத்துவமனை ஊழியர்கள் முயற்சிப்பதை குடும்ப உறுப்பினர்கள் பார்த்துள்ளனர்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்து ஒரு நாய் மருத்துவமனை ஊழியர்களை விலக்கிக்கொண்டு செல்வதை தாங்கள் கவனித்ததாகவும், அதனைஅடுத்து, இரண்டு மணி நேரத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும் தங்களிடம் கூறப்பட்டதாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாய் வார்டு பகுதிக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து, குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

baby 1 - 2025

குடும்ப உறுப்பினர்கள் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தபோது, ​​கழுத்து மற்றும பிற பாகங்களில் பல காயங்களுடன் தரையில் இறந்து கிடந்த குழந்தையைத்தான் அவர்கள் காணும்படி நேர்ந்தது.

சுற்றுவட்டாரத்தில் பெரும்அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் மன்வேந்திர சிங் எஃப்.ஐ.ஆருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) சந்திர சேகர் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த மருத்துவமனை பதிவு செய்யப்படாதது என்றும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்கு குழந்தையின் உடல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மோஹித் குப்தா மற்றும் பிரசவத்தின்போது உடனிருந்த சில ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை உரிமையாளர் விஜய் படேல் கூறுகையில், ”பிறந்த குழந்தை நாய் கடித்து இறந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுமையான அறியாமையைக் காட்டுகிறது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories