December 7, 2025, 2:11 AM
25.6 C
Chennai

ஒரு மணி நேர தலைமை ஆசிரியர்! வாய்ப்பாடு சொன்னால் கிடைக்கும் பரிசு!

hm 1 - 2025

கரூர் மாவட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், வாய்ப்பாடு ஒப்பித்த மூன்று மாணவ, மாணவிகளை தலா ஒருமணி நேரம் தான் வகித்த தலைமை ஆசிரியர் பதவியை வகிக்க வைத்து, மாணவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இயங்கி வருகிறது, லிங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பரணிதரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கல்வியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்த புதுப்புது பாணிகளைக் கையாண்டு வருகிறார். அந்த வகையில், 4, 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 9-வது வாய்ப்பாடு வரை பிழையில்லாமல் ஒப்பித்த மூன்று மாணவ, மாணவிகளை தலா ஒரு மணிநேரம் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்க வைத்து, அழகு பார்த்திருக்கிறார்.

hm - 2025

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் 9-வது வாய்ப்பாடு வரை தெளிவாகப் படித்து வரும்படி, தலைமை ஆசிரியர் பரணிதரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களை வாய்ப்பாட்டை ஒப்பிக்க வலியுறுத்தினார்.

9-வது வாய்ப்பாடு வரை தவறில்லாமல் மாணவிகள் ஜனனி, சத்யப்ரியா மற்றும் மாணவன் லோகேஷ் ஆகியோர் ஒப்பித்தனர். அவர்களைப் பாராட்டிய தலைமை ஆசிரியர் பரணிதரன், அவர்களை கௌரவிக்கும்விதமாக தான் வகித்துவந்த தலைமை ஆசிரியர் பதவியை அந்த மூன்று மாணவர்களுக்கும் அளித்து, மூன்று மாணவர்களையும் தலா ஒருமணி நேரம் தலைமை ஆசிரியர் பதவியை வகிக்கவைத்தார்.

thalamai asiriyar - 2025

பரணிதரன்அவர்கள் பதவி வகித்த அந்த நேரத்தில், தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்தனர்.

இந்த முயற்சி மாணவர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இனி வாரம்தோறும் பாடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு இப்படி சரியாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும்.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் பரணிதரனிடம் பேசினோம். “மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகிறேன்.
அந்த வகையில்தான், 9-வது வாய்ப்பாடு வரை ஒப்பிக்கும்

மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவியை வகிக்கும் உரிமையைக் கொடுக்க நினைத்தேன். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் இந்த மூன்று மாணவ, மாணவிகள்தான் 9-வது வாய்ப்பாடு வரை தடுமாறாமல் ஒப்பித்தனர்.

அந்த மூன்று மாணவர்களுக்கும் தலா ஒரு நாள் தலைமை ஆசிரியர் பதவி வழங்க நினைத்தேன். ஆனால், அப்படிச் செய்தால் பள்ளியின் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், 3 பேருக்கும் தலா ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கினேன்.

hm 2 - 2025

அதன்படி, பகல் 12 முதல் 1 மணி வரை ஜனனி, பிற்பகல் 2 முதல் 3 மணி வரை லோகேஷ், பிற்பகல் 3 முதல் 4.10 மணி வரை சத்யப்ரியா ஆகிய 3 பேர் தலைமை ஆசிரியர் பதவி வகித்தனர்.

அவர்கள் பதவி வகித்த அந்த நேரத்தில், தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்தனர். இந்த முயற்சி மாணவர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால், இனி வாரம்தோறும் பாடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு இப்படி சரியாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories