கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

dmk anbazhagan - 2026
file picture

கோமாவில் இருந்த காலத்தில் அதிமுக., பொதுச் செயலர் ஜெயலலிதா கைநாட்டு தான் வெச்சதா இவங்க பிரச்னையை கிளப்பினாங்க.. ஆனால் இவங்க கட்சி பொதுச் செயலாளரோ கோமாவுல இருக்குற காலத்துல தெள்வா சிந்திச்சி உத்தரவு பிறப்பித்து, கையெழுத்தும் போட்டு கலக்கிருக்காரு… என்று கிண்டல் அடிக்கின்றனர் அரசியல் வட்டத்தில்!

தற்போது கோமாவில் இருக்கும் திமுக., பொதுச்செயலாளர் க.அன்பழகன் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டது போல அவர் பெயரில் வெளியான அறிக்கையால் மற்ற கட்சியினர் மட்டுமல்ல, திமுக.,வினரே கடுங் குழப்பத்தில் உள்ளனர்.

anbazhagan sign - 2026

தி.மு.க., பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 97) உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் கோமா நிலையில் சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கமாக தி.மு.க.,வின் முக்கியமான அறிக்கைகள் அன்பழகனின் பெயரில் தான் வெளியாகும் என்ற நிலையில், இப்போது அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்று சொல்லப்படும் காலத்திலும் அவரது பெயரிலேயே அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்று காலை குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ., காலமானார். அடுத்தடுத்து இரு நாட்களில் இரு எம்.எல்.ஏ.,க்கள் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.,க்களின் கூட்டத்தை அக்கட்சி ஒத்திவைப்பதாக ஓர் அறிக்கை வெளியானது.

இவ்வாறு வெளியான அறிக்கை கூட பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் வெளிவருகிறது. இது திமுக மீதான நம்பகத்தன்மையை குலைத்து விடுவதாகக் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் கருணாநிதி இருந்த போது அவர் பெயரிலும் அறிக்கை வரும். இது போன்ற முக்கிய அறிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினோ, மேல் மட்ட தலைவர்களோகூட வெளியிடலாம். தவறில்லை. ஆனால் பத்து நாட்களாக கோமாவில் இருக்கும் ஒருவர் அறிக்கையில் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிட்டார் என்பது போல அவர் பெயரில் வெளியாகியிருப்பது கட்சித் தொண்டர்களை ஏமாற்றும் செயல்.

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை…. என்கின்றனர்.

ஒரு வேளை திமுக., பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தியது போன்று… அன்பழகனிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தி விட்டார்களோ என்னவோ?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories