விளைஞ்ச காய்கறி விலை போகல… வருத்தத்தில் விவசாயிகள்!

brinjal

மதுரை, சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைந்து வருகிறது விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் பல்வேறு விவசாயங்கள் நடந்து வருகிறது இதில் கத்திரிக்காய், சீனிஅவரைக்காய், தக்காளி உள்பட பணப்பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் காய்கறிகளை எடுத்து வெளியே கொண்டு செல்ல முடியாத அவல நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் விலைபோகாத விளைந்த காய்கறிகள் பழுத்து அழுகி மண்ணோடு மண்ணாக நாசம் அடைந்து வருகிறது. இதனால்  காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு  பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயி பஞ்சவர்ணம் (45) கூறியதாவது:

நாங்க ரொம்ப காலமா காய்கறி பயிரிட்டு வருகிறோம் அதேபோல இந்த ஆண்டும் சீனிவரக்கா, தக்காளி, அவரக்கா, கத்திரிக்கா பயிர் செய்தோம். தற்போது விளைந்து விற்பனைக்கு செய்யக்கூடிய நிலையில் கொரோனா நோய் வந்துருச்சு. அதிலிருந்து நாங்க காய்கிற பறிக்க முடியல…

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

அப்படியே காய்கறிகள பறித்து மதுரை கொண்டு போனாலும் ரொம்ப குறைஞ்ச விலைக்கே கேட்கிறாங்க. ஏன் இப்படினு கேட்டா இந்த பாழா போன நோயினால யாரும் காசு இல்லாம காய்கறி வாங்க வர மாட்டாங்கன்னு சொல்றாங்க..

இப்படி சொன்னா நாங்க எங்க போயி… வாங்கிய கடனை எப்படிஅடைக்க முடியும்?! இப்ப வெளஞ்ச காய்கறி விற்க முடியாம செடியிலே பழுத்து அழகி வீணாக போவுது… அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யணும் எங்க பிள்ளைங்கள எல்லாம் காப்பாத்தனும்!  நான் மட்டுமில்லீங்க… இந்த பகுதியில் பல விவசாயிகள் இதே நிலையில தான் இருக்காங்க … எங்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கணும்னு கேட்டுக்குறேன்… என்றார்!

இந்தியாவின் முதுகெலும்பு என்று விவசாயிகளை கூறி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு பலதரப்பட்ட நஷ்டங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசு விவசாயிகள் மீது கவனம் செலுத்தி தொடர்ந்து விவசாயம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை தீர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் பாலமுருகன் நம்மிடம் அக்கறையுடன் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories