January 25, 2025, 1:46 PM
28.7 C
Chennai

த்ரிஷா திருமண சீகரெட்..! ஜோடி யாரு தெரியுமா?

trisha
trisha
  • த்ரிஷாவுக்கு கெட்டிமேளம் கொட்ட இருக்கிறது!
  • விவாதத்திற்கு பெயர்போன ஹீரோவோடு திருமணம் நிச்சயம்.
  • சைலண்டாக அனைத்தும் ரெடி.

தென்னிந்தியாவின் ஸ்டார் ஹீரோயின் திரிஷா ஒருவழியாக மணமேடை ஏற இருப்பதாக தெரிகிறது.

கோலிவுட் ஸ்டார் ஹீரோவான சிம்புவோடு அவருடைய திருமணம். திருமணத்திற்கு சைலண்டாக அனைத்து ஏற்பாடுகளும் நடப்பதாக டாக்.

டாலிவுட் மோஸ்ட் எலிஜிபுள் லேடி பேச்சிலர் லிஸ்டில் திரிஷா பெயர் முக்கியமாக கூறலாம் . 37 வயது வந்தாலும் அழகு குறையாமல் சவுத் இந்தியன் ஆடியன்சை மகிழ்வித்து வரும் இந்த அழகி இன்னும் திருமண மேடை ஏறவில்லை .

கடந்த காலத்தில் ஒரு முறை திருமண மேடையேறும் வாய்ப்பு ஏற்பட்டாலும் சில காரணங்களால் அது நடக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனோடு எங்கேஜ்மென்ட் கூட நடத்திக் கொண்டு திருமணத்தை கேன்சல் செய்தார் திரிஷா.

அதன்பின் சிறிது ஆண்டுகள் திருமண எண்ணத்தை ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் புதிதாக கோலிவுட் வட்டாரத்திடமிருந்து காதில் விழும் செய்தியின்படி திரிஷா திருமணம் ஒரு ஸ்டார் ஹீரோவோடு ஃபிக்ஸ் ஆகி இருப்பதாக தெரிகிறது.

ALSO READ:  செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!
trisha
trisha

தென்னிந்திய திரை உலகை கடந்த 18 ஆண்டுகளாக ஆண்டு வரும் தெலுங்கு தமிழ் மொழிகளில் உள்ள அனைத்து உயர் ஹீரோக்களுடனும் ரொமான்ஸ் செய்த திரிஷா கடந்த சில காலமாக சினிமாக்களை குறைத்துக்கொண்டார். அதனால் இவருடைய பார்வை திருமணத்தின் மீது விழுந்தது என்றும் அதனால்தான் சினிமாக்களை குறைவாக செய்து வருகிறார் என்றும் டாக் நடந்துவந்தது.

அதன்படி இவர் தென்பட்ட ஒவ்வொரு இன்டர்வியூவிலும் திருமணம் குறித்து கேள்விகளை எதிர்கொண்டார் திரிஷா. ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியது ஒன்றேதான். “பிடித்த ஆண்மகன் கிடைத்தால் லாஸ்வேகாசிலேயே திருமணம் செய்து கொள்வேன்” என்பார்.

இந்த பின்னணியில் திரிஷா ஆசைப்பட்டபடி ஒரு ஆண்மகன் அவருக்கு மிகவும் பிடித்து விட்டார் என்றும் அவர் வேறு யாருமல்ல கோலிவுட் ஸ்டார் ஹீரோ சிம்பு தான் என்றும் செய்திகள் ஹாட் டாபிக்காக மக்களிடையே சுற்றிவருகிறது.

தமிழ் சினி வட்டாரங்கள், மீடியா ‘கதை’களின் படி ஹீரோ சிம்புவோடு திரிஷா திருமணம் நிச்சயமாகி விட்டதாக தெரிகிறது. ஆயின், ஹீரோ சிம்பு கடந்த காலத்தில் ஹீரோயின்களுடன் நடத்திய பிரேமாயணம் அனைவருக்கும் தெரிந்ததே. முதலில் நயன்தாராவுடன் சுற்றிவந்தார் இந்த ஹீரோ. அதன்பின் ஹன்சிகாவோடு பிரேமாயணம் நடத்தி தோல்வி கண்டார்.

ALSO READ:  தென்காசி மாவட்டத்தில் கனமழை! வெள்ளப் பெருக்கில் குற்றால அருவிகள்!

இத்தனை நடந்தது தெரிந்தாலும் கடந்த சில நாட்களாக திரிஷா சிம்புவோடு காதலில் விழுந்து விட்டார் என்றும் இவர்களின் திருமணத்திற்கு பெரியவர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டது என்றும் முகூர்த்தம் தேதி குறிக்கும் யோசனையில் உள்ளார்கள் என்றும் மீடியாவில் பெரிய அளவில் ‘கதை’கள் உலா வருகின்றன.

trisha-simbu
trisha-simbu

திரிஷா, சிம்பு ஜோடியாக விண்ணைத்தாண்டி வருவாயா, அலை திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்கள். இந்த இரண்டு சினிமாக்களும் சூப்பர் ஹிட் ஆயின.

தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா சீக்வெலில் மீண்டும் இந்த இருவரும் ஜோடி சேரப்போவதாக தெரிகிறது.

பார்ப்போம்… பொறுத்திருந்து பார்ப்போம்… திரிஷா, சிம்பு திருமணச் செய்திகளுக்கு இவர்கள் இருவரில் யாராவது பதில் கூறுகிறார்களா? இந்தச் செய்தியில் உண்மை உள்ளதா இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.