February 22, 2026, 6:05 AM
25.4 C
Chennai

முதல்வர் கையால் விருது! சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து! இடமாற்றம் ஆன தாசில்தார்!

Screenshot_2020_0819_120335

பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரிடம் விருது வாங்கியதை கொண்டாடுவதற்காக சக ஊழியர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி கொடுத்த பெண் தாசில்தார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பலர் வேலை இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்கள் ஒன்று கூடி தலவாழை பிரியாணி விருந்து படைத்து, அதனை பேஸ்புக்கில் லைவ் செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் தாசில்தார் ஒருவர், சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்

கொரோனா காலத்தில் இப்படி பெண் தாசில்தார் நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாசில்தாராக செயல்பட்டு வந்தவர் ஜெயசித்ரா. பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சிறப்பு விருது வழங்கினார். இதையடுத்து, சக ஊழியர்களுக்கு விருந்து வைக்க தாசிர்தார் ஜெயசித்ரா முடிவு செய்தார். அதன்படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி விருந்துக்கான ஏற்பாடு நடந்துள்ளது. இந்த விருந்துக்கு பின்னதாக ஜெயசித்ராவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றி வரும் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் தலவாழை இலையுடன் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

Screenshot_2020_0819_120108

இந்த பிரியாணி விருந்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது, கொரோனா காலத்தில் விதிகளை மீறி பிரியாணி விருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தாசில்தார் ஜெயசித்ராவை பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரி ஒருவர், அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories