மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணுடன் குடித்தனம்! இழுத்து அடித்துத் துவைத்து செருப்படி கொடுத்த மனைவி!

Sandal-feet

மனைவியை துரத்திவிட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை, மனைவியும் அவரது உறவினர்களும் சாலையில் இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்து போலீசிடம் அழைத்து சென்றனர்.

தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெட்டா போன்கூர் கிராமத்தைச் சேர்ந்த கொண்டா சம்பத் கரீம்நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.

இவருக்கும் கடந்த அதே பகுதியில் உள்ள மனகந்தூர் மண்டலத்தின் குடூரைச் சேர்ந்த பாக்யலட்சுமி என்பவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இவர் தன் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்

அதன்பிற்கு தன்னுடன் வணிக வளாகத்தில் வேலைபார்த்து வந்த வேறு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அத்துடன் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பத்தின் மனைவி தனது குடும்பத்தினருடன் நேராக கணவனின் வீட்டுக்கு சென்றார். அங்கு சம்பத்தை ஆவேசத்துடன் அடித்து துவைத்தார் மனைவி.

அதன்பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து, செருப்பு, விளக்குமாற்றால் அடித்து, கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பத்திடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பெண்களும் தனித்தனியே அளித்த புகாரை ஏற்ற போலீசார், சம்பத்திடம் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories