மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி!

rajini-returned-from-hyderabad1
rajini-returned-from-hyderabad1

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடான சூழலை அடுத்து, மேல் சிகிச்சை பெற நடிகர் ரஜினி காந்த் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப் படுகிறது.

ரசிகர்கள், தமிழகத்தின் ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலரின் பெருத்த எதிர்பார்ப்பால், ரஜினி தாம் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வுள்ளதாகக் கூறியிருந்தார். இடையில் அவரது உடல் நிலை குறித்து ஒரு மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலை எங்கும் வெளியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட உகந்த நிலையில் இல்லை என்றும், வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதை அடுத்து, ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்று ஊகங்கள் உலாவின. ஆனால், எப்படியும் சூழல்களை உத்தேசித்து டிச.31ம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பேன் என்று உறுதி அளித்தார் ரஜினி.

இந்த இடைப்பட்ட நேரத்தில், தாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பதற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும், அதற்காக படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் பேசியிருப்பதாகவும் கூறினார்.

இடையில், தனது பிறந்த நாளை ஒட்டி வீட்டின் முன் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம், கொரோனா கால கட்டுப்பாடுகளைக் கடைபிடியுங்கள் என்று கூறிவிட்டு, ஹைதராபாதில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடந்ததில், ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. எனினும், அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

பின்னர் சென்னை திரும்பிய ரஜினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, கட்சி அரசியலுக்கு தாம் வரப் போவதில்லை என்று கூறினார் ரஜினி. அதற்காக தன்னை அனைவரும் மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், பிப்ரவரி மாதம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க சன்பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரஜினி ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். எனவே தற்போதைய உடல் நிலையைக் கருதி, மேல் சிகிச்சை பெறுவது அவசியம் என்பதால், அடுத்த சில நாட்களில் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். தற்போது மாறுபாடடைந்த கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் பரவி வரும் நிலையில், அவர் அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும், அனேகமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories