மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி!

rajini-returned-from-hyderabad1
rajini-returned-from-hyderabad1

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடான சூழலை அடுத்து, மேல் சிகிச்சை பெற நடிகர் ரஜினி காந்த் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப் படுகிறது.

ரசிகர்கள், தமிழகத்தின் ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலரின் பெருத்த எதிர்பார்ப்பால், ரஜினி தாம் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வுள்ளதாகக் கூறியிருந்தார். இடையில் அவரது உடல் நிலை குறித்து ஒரு மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலை எங்கும் வெளியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட உகந்த நிலையில் இல்லை என்றும், வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதை அடுத்து, ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்று ஊகங்கள் உலாவின. ஆனால், எப்படியும் சூழல்களை உத்தேசித்து டிச.31ம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பேன் என்று உறுதி அளித்தார் ரஜினி.

இந்த இடைப்பட்ட நேரத்தில், தாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பதற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும், அதற்காக படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் பேசியிருப்பதாகவும் கூறினார்.

இடையில், தனது பிறந்த நாளை ஒட்டி வீட்டின் முன் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம், கொரோனா கால கட்டுப்பாடுகளைக் கடைபிடியுங்கள் என்று கூறிவிட்டு, ஹைதராபாதில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடந்ததில், ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. எனினும், அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

பின்னர் சென்னை திரும்பிய ரஜினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, கட்சி அரசியலுக்கு தாம் வரப் போவதில்லை என்று கூறினார் ரஜினி. அதற்காக தன்னை அனைவரும் மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், பிப்ரவரி மாதம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க சன்பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரஜினி ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். எனவே தற்போதைய உடல் நிலையைக் கருதி, மேல் சிகிச்சை பெறுவது அவசியம் என்பதால், அடுத்த சில நாட்களில் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். தற்போது மாறுபாடடைந்த கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் பரவி வரும் நிலையில், அவர் அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும், அனேகமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories