மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி!

rajini-returned-from-hyderabad1
rajini-returned-from-hyderabad1

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடான சூழலை அடுத்து, மேல் சிகிச்சை பெற நடிகர் ரஜினி காந்த் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப் படுகிறது.

ரசிகர்கள், தமிழகத்தின் ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலரின் பெருத்த எதிர்பார்ப்பால், ரஜினி தாம் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வுள்ளதாகக் கூறியிருந்தார். இடையில் அவரது உடல் நிலை குறித்து ஒரு மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலை எங்கும் வெளியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட உகந்த நிலையில் இல்லை என்றும், வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதை அடுத்து, ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்று ஊகங்கள் உலாவின. ஆனால், எப்படியும் சூழல்களை உத்தேசித்து டிச.31ம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பேன் என்று உறுதி அளித்தார் ரஜினி.

இந்த இடைப்பட்ட நேரத்தில், தாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பதற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும், அதற்காக படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் பேசியிருப்பதாகவும் கூறினார்.

இடையில், தனது பிறந்த நாளை ஒட்டி வீட்டின் முன் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம், கொரோனா கால கட்டுப்பாடுகளைக் கடைபிடியுங்கள் என்று கூறிவிட்டு, ஹைதராபாதில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடந்ததில், ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. எனினும், அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

பின்னர் சென்னை திரும்பிய ரஜினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, கட்சி அரசியலுக்கு தாம் வரப் போவதில்லை என்று கூறினார் ரஜினி. அதற்காக தன்னை அனைவரும் மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், பிப்ரவரி மாதம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க சன்பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரஜினி ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். எனவே தற்போதைய உடல் நிலையைக் கருதி, மேல் சிகிச்சை பெறுவது அவசியம் என்பதால், அடுத்த சில நாட்களில் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். தற்போது மாறுபாடடைந்த கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் பரவி வரும் நிலையில், அவர் அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும், அனேகமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories