முகக் கவசம் அணியாவிட்டால்… பெட்ரோல் கிடையாது! இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள்!

பெட்ரோல் மையம்

தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று முதல் முககவசம் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படமாட்டாது என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகள் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நெல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, வாகனங்களில் பெட்ரோல் விற்பனைசெய்யப்படாமல், அவர்களை திருப்பி அனுப்பினர்! தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் இதே நடைமுறை பெட்ரோல் நிரப்பும் மையங்களில் கடைபிடிக்கப் படுகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் கால கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், வாக்கு சேகரிப்பு கூட்டங்கள் ஆகியவை கொரோனா விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப் படாமல், தேர்தலும் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மையங்களில் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவில் திருவிழாக்களுக்கு தடை , திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி , பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது.

இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. அவர்களின் வாகனங்களில் பெட்ரோல் போடாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் . நெல்லை மாநகர் பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பங்குகளில் முகக் கவசம் கட்டாயம் என்பது முழு அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories