December 6, 2025, 9:45 AM
26.8 C
Chennai

இனி அப்படி பட்ட படம் பார்க்க முடியாதாமே..! ஆப்புக்கு ஆப்பு!

mobile
mobile

இந்தியாவில் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு தான். என்றாலும் கூட ஆன்லைன் மூலம் குறுக்கு புத்தி கொண்ட சிலர் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

நேரடியாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதைக் காட்டிலும் இதுபோன்று திரைமறைவில் இருந்துகொண்டு பணத்தை பறிப்பது மிக எளிதாக இருக்கின்றது. பண மோசடி மட்டுமில்லாமல் குழந்தைகள், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றவும் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களும் நுழைந்து வீடியோக்களைப் பார்க்கின்றனர்.

தரவிறக்கவும் செய்து ஷேர் செய்கின்றனர். அதேபோல தடை செய்யப்பட்ட வீடியோ கேம்களையும் தரவிறக்கி விளையாடி காசு பார்க்கின்றனர். ஒருசிலர் காசை இழக்கின்றனர்.

இவையனைத்திற்கும் VPN எனப்படும் Virtual Private Network மூலக்காரணியாக உள்ளது. சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளம் தெரியாதவர்களாகக் காட்டிக்கொள்ள இந்த விபிஎன் சேவை பேருதவியாக இருந்து வருகிறது. குற்றவாளிகள் இணையதளத்தில் என்ன தேடுகிறீர்கள், அவர்கள் செல்லும் வெப்சைட்கள் என அனைத்தையும் இது மறைக்கிறது.

vpn
vpn

அதாவது விபிஎன் ஆக்டிவேட் செய்துவிட்டால் ஐபி முகவரி மாறிவிடும். இதனால் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் விபிஎன் மூலம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருப்பது போன்று காட்டும்.

இதனால் அவர்களை டிராக் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கிறது. நல்ல விதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு விபிஎன் பாதுகாப்பான அம்சம் தான். ஆனால் குற்றவாளிகள் கையில் சிக்கும் பட்சத்தில் பல நல்லவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறதே.

அது தான் இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ். இச்சூழலில் இந்தியாவில் இந்த விபிஎன் சேவைக்கு தடை கோரி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில், “விபிஎன் சேவைகளும் டார்க் வெப் சேவையும் சைபர் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன.

குற்றவாளிகளை அடையாளம் தெரியாத வகையில் ஆன்லைனில் செயல்பட அனுமதிக்கிறது. விபிஎன்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இது பெரும் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஆகவே மத்திய உள்துறை அமைச்சகம், ஐடி அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் அதுபோன்ற விபிஎன்களையும் டார்க் வெப்பையும் கண்டறிந்து நிரந்தரமாக தடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories