தடுப்பூசி, சானிடைசருடன் பிள்ளையார்! ஆர்வத்துடன் கண்ட மக்கள்!

pillayar
pillayar

திருச்சி மன்னார்புரத்தில் கொரோனா தடுப்பூசிகள், மாஸ்க், சானிடைசருடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது பலரையும் கவர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு கோலங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். கணினி இயக்குவது, இசையமைப்பது, கிரிக்கெட் விளையாடுவது இசைக் கருவிகள், நவீன கருவிகளை இயக்குவது போன்ற சிலைகளை வைப்பார்கள்.

பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை. வீடுகளில் வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அரசு வழிகாட்டுதல் படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை. ஆனாலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர் முழுக்க 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அறநிலையத்துறை மற்றும் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டன.

அதேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 1 – 3 அடி உயரம் வரையிலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இதன்படி, மன்னார்புரம் நடுத்தெருவில் அப்பகுதி இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பலரையும் கவர்ந்துள்ளது.

மும்பையில் இருந்து கல் வேலைப்பாடுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை மன்னார்புரத்தைச் சேர்ந்த சந்துரு மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிலையின் ஒரு கையில் கோவாக்சின், மற்றொரு கையில் கோவிஷீல்டு என்று எழுதப்பட்ட சிரஞ்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையில் கிருமிநாசினி (சானிடைசர்) , மாஸ்க் (முகக் கவசம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பலரும் விநாயகர் சிலையை ஆர்வமாக பார்த்துச் செல்வதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைக்கு தீபாராதனை காட்டி, கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories