February 21, 2026, 3:38 PM
30.4 C
Chennai

தடுப்பூசி, சானிடைசருடன் பிள்ளையார்! ஆர்வத்துடன் கண்ட மக்கள்!

pillayar
pillayar

திருச்சி மன்னார்புரத்தில் கொரோனா தடுப்பூசிகள், மாஸ்க், சானிடைசருடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது பலரையும் கவர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு கோலங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். கணினி இயக்குவது, இசையமைப்பது, கிரிக்கெட் விளையாடுவது இசைக் கருவிகள், நவீன கருவிகளை இயக்குவது போன்ற சிலைகளை வைப்பார்கள்.

பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை. வீடுகளில் வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அரசு வழிகாட்டுதல் படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை. ஆனாலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர் முழுக்க 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அறநிலையத்துறை மற்றும் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டன.

அதேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 1 – 3 அடி உயரம் வரையிலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மன்னார்புரம் நடுத்தெருவில் அப்பகுதி இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பலரையும் கவர்ந்துள்ளது.

மும்பையில் இருந்து கல் வேலைப்பாடுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை மன்னார்புரத்தைச் சேர்ந்த சந்துரு மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிலையின் ஒரு கையில் கோவாக்சின், மற்றொரு கையில் கோவிஷீல்டு என்று எழுதப்பட்ட சிரஞ்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையில் கிருமிநாசினி (சானிடைசர்) , மாஸ்க் (முகக் கவசம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பலரும் விநாயகர் சிலையை ஆர்வமாக பார்த்துச் செல்வதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைக்கு தீபாராதனை காட்டி, கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories