கொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை! WHO பரிந்துரை!

who - 2026

கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கையான நோய் எதிர்ப்பு புரதங்களைக் கொண்டு (ஆன்டிபாடி) சிகிச்சை அளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் மீண்டு வந்துள்ளன. எனினும் மீண்டும் பரவலாம் என்பதால் அடுத்தடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அபாயம் அதிகமிருப்பவா்களுக்கும் தீவிரமான கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் செயற்கையான ஆன்டிபாடிக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு மேம்பாட்டுக் குழு (ஜிடிஜி) பரிந்துரைத்துள்ளது.

‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு வகை செயற்கை நோயெதிா்ப்பு புரதங்களைக் கொண்டு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி குழு தெரிவித்துள்ளது.

முதலாவதாக, கொரோனா பாதிப்பு அதிகமில்லாவிட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அபாயம் அதிகமுள்ள வயதானவா்கள், ஏற்கெனவே நீண்டகால நோயால் அவதிப்படுவோர் போன்றவா்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி கூறியுள்ளது.

மேலும், இயற்கையிலேயே நோயெதிா்ப்புப் புரதத்தை உற்பத்தி செய்ய முடியாத உடல்குறைபாடு கொண்ட, கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய நோயாளிகளுக்கும் ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது. முன்று ஆய்வுகளில் காணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில், ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைச் செலுத்தினால், நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அபாயம் குறையலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு ஆய்வு முடிவுகளின் மூலம், இந்த இரு செயற்கைப் புரதங்களும் நோயெதிா்ப்புக் குறைபாடு கொண்டவா்கள் கொரோனாவால் உயிரிழப்பதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories