December 6, 2025, 6:38 AM
23.8 C
Chennai

கொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை! WHO பரிந்துரை!

who - 2025

கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கையான நோய் எதிர்ப்பு புரதங்களைக் கொண்டு (ஆன்டிபாடி) சிகிச்சை அளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் மீண்டு வந்துள்ளன. எனினும் மீண்டும் பரவலாம் என்பதால் அடுத்தடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அபாயம் அதிகமிருப்பவா்களுக்கும் தீவிரமான கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் செயற்கையான ஆன்டிபாடிக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு மேம்பாட்டுக் குழு (ஜிடிஜி) பரிந்துரைத்துள்ளது.

‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு வகை செயற்கை நோயெதிா்ப்பு புரதங்களைக் கொண்டு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி குழு தெரிவித்துள்ளது.

முதலாவதாக, கொரோனா பாதிப்பு அதிகமில்லாவிட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அபாயம் அதிகமுள்ள வயதானவா்கள், ஏற்கெனவே நீண்டகால நோயால் அவதிப்படுவோர் போன்றவா்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி கூறியுள்ளது.

மேலும், இயற்கையிலேயே நோயெதிா்ப்புப் புரதத்தை உற்பத்தி செய்ய முடியாத உடல்குறைபாடு கொண்ட, கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய நோயாளிகளுக்கும் ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது. முன்று ஆய்வுகளில் காணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில், ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைச் செலுத்தினால், நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அபாயம் குறையலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு ஆய்வு முடிவுகளின் மூலம், இந்த இரு செயற்கைப் புரதங்களும் நோயெதிா்ப்புக் குறைபாடு கொண்டவா்கள் கொரோனாவால் உயிரிழப்பதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories