டி20 உலகக் கோப்பை போட்டிகள்: ஒரு பார்வை

england india t20
england india t20

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கும், இந்திய கிரிக்கெட்டிற்கும் இடையேயான உறவு எப்போதுமே மறக்க முடியாதது ஆகும். டி20 ஆட்டங்களுக்காக முதன்முறையாக 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் நடத்தப்பட்டது. இந்த முதல் போட்டியில் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி இந்தக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலககோப்பை போட்டியின் முதல் சாம்பியன் என்ற பட்டத்தை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது. இந்த தொடரில் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் இல்லாமல் இளம் இந்திய அணி களமிறங்கி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இந்தக் போட்டியில் ‘யுவராஜ் சிங்’ அடித்த ஒரு ஓவரில், ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள்; இறுதியாட்டத்தில் கௌதம் கம்பீர் அடித்த 75 ரன்; ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி அடித்த 30 ரன்; கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மா; 12ஆவது ஓவரில் 77 ரன்னுக்கு 6 விக்கட் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியை 43 ரன் எடுத்து, அதிரடியாக ஆடிய மிஸ்பா-உல்-ஹக்; கடைசி ஓவரில் அவர் அடித்த ரிவர்ஸ் சுவீப்பை கேட்ச் பிடித்த ஸ்ரீசாந்தின் உணர்ச்சி கொந்தளிப்பு; ஆகியவை என்றும் மறக்க முடியாது.

முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 2009ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக் கோப்பையில் மீண்டும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்த முறை இலங்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதன்முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றியது.

2010ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உலகக் கோப்பை டி20 போட்டித்தொடர் நடைபெற்றது. இந்த முறை கிரிக்கெட் உலகில் கோலோச்சிய ஆஸ்திரேலியாவும், ஒருமுறை கூட எந்தவொரு உலகக் கோப்பையையும் கைப்பற்றாத நிலையில் இருந்த இங்கிலாந்தும் இறுதிப் போட்டியில் மோதின. ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடித்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதன்முறையாக டி20 உலககோப்பையை வென்று சாதனை படைத்தது.

2012ஆம் ஆண்டு உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலகக் கோப்பை வென்று சாம்பியன்கள் பட்டியலில் இடம்பிடித்தது.

2014ம் ஆண்டு வங்காளதேசத்தில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2016ம் ஆண்டு முதன்முறையாக டி20 உலககோப்பை இந்தியாவில் நடைபெற்றது. ஆனால், இந்த முறை இறுதிப்போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலககோப்பையை கைப்பற்றியது.

அடுத்த போட்டி 2020இல் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்தது. அதற்கடுத்த போட்டி 2021இல் இந்தியாவில் நடக்கவிருந்தது. கொரொனா காரணமாக இரண்டு பொட்டிகளும் தள்ளிப் போயுள்ளன. மேலும் 2021 போட்டியை இந்தியா நடத்துவது என்றும், 2022 போட்டியை ஆஸ்திரேலியா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021 போட்டிகளை ஷார்ஜா, துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது.

இன்று (17.10.2021) இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories