December 6, 2025, 11:02 AM
26.8 C
Chennai

ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு 5 லட்சம் மதிப்புள்ள முத்தங்கி காணிக்கை!

karur kalayana venkarama kovil
karur kalayana venkarama kovil

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சென்னையை சேர்ந்த கண்ணன் ஆடிட்டர் என்பவர் தனது குடும்பத்துடன் தனது குலதெய்வமான கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான முத்தங்கி ஆடை ஆபரணங்களுடன் தனது நேர்த்தி கடனையைச் செய்தார்.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் பண்டைய காலத்தில் பாறையில் செதுக்கும்போது தானே உருவான பெருமாள் தொன்மையான பெயருமுண்டு.

kalyana venkatraman kovil
kalyana venkatraman kovil

அப்பொழுது இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் பல்வேறு பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை நேர்த்திக் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இன்னிலையில் சென்னையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது 4 சகோதரர் மற்றும் ஒரு சகோதரி உடன் குடும்பம் பிரார்த்தனைக்காக கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய உற்சவர் சிலைக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முத்தங்கி ஆடை வழங்கினார்.

பின்னர் அவர் மூலவரான கல்யாண வெங்கட்ரமண சுவாமி முத்தங்கி ஆடை அணிவிக்க விருப்பம் இருந்த நிலையில் அதனை ஆலயத்தில் உள்ள பட்டாச்சாரியார் முன்னிலையில் அதனை ஒப்படைத்தார்.

perumal
₹#perumal

சுமார் 5 லட்சம் மதிப்பிலான முத்தங்கி ஆடையை தனது குடும்பத்துடன் தனது குலதெய்வமான கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு வழங்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கண்ணன் தெரிவித்தார்.

கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற முத்தங்கி ஆடை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு முன்பாக மூலவர் கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அணிவித்து அதன்பிறகு முத்தங்கி ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தின் பட்டாச்சாரியார் துளசியால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மகா தீபாராதனை நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories