பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்! நாசா வெளியிட்ட தகவல்!

Asteroid 1 - 2026

வரும் டிசம்பர் 11 அன்று, இந்த சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய இருப்பதாக நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4660 நீரியஸ் என்று இந்த சிறுகோள் பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த 1982-ஆம் ஆண்டு இந்த சிறுகோள் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளில் பூமிக்கு இவ்வளவு அருகில் இந்த சிறுகோள் வந்ததில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 11 அன்று பூமிக்கு மிக அருகில் இந்த சிறுகோளைப் பார்க்கலாம். பிரம்மாண்டமான இந்த சிறுகோள் ஈஃபில் டவரின் அளவில் உள்ளது.

330 மீட்டர் சுற்றளவு உள்ள முட்டையின் வடிவில் இருக்கும் 4660 நீரியஸ் இன்னும் இரண்டு வாரங்களில் பூமியிலிருந்து 2.5 மில்லியன் மைல்கள் தொலைவில் வந்திருக்கும். கேட்பதற்கு இது மிகபெரும் தூரமாகத் தோன்றினாலும், இது பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனை விட பத்து மடங்குதான் தூரம்.

ஆய்வாளர்களால் இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய சிறுகோளாகக் கருதப்படுகிறது. வாகான இதன் முட்டை வடிவம், நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஏற்ற பொருளாகப் பார்க்கப்படுகிறது.

Asteroid - 2026

இதனிடம் இருக்கும் கனிமப்பொருட்களும் இதனின் கவர்ச்சிக்கு ஒரு காரணம். இதனிடம் பில்லியன் கணக்கில் மதிப்புள்ள நிக்கல், கொபால்ட், இரும்பு போன்ற கனிம வளங்கள் உள்ளன.

சிறுகோள்களிலிருந்து கனிமங்களை எடுக்கும் திட்டம் கடந்த 2010 முதல் பேசப்படும் திட்டமாக இருக்கிறது. ப்ளூ ஆரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் முதலிய தனியார் நிறுவனங்கள் தலை தூக்கிய பின்னர் இந்த திட்டங்கள் பெருமளவில் சாத்தியப்படும் ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது.

இன்னும் ஒரு வருடத்தில் நீரியசின் சுற்றுப்பாதைக்குள் ரோபோ இயந்திரக் கருவிகள் நுழைய முடியும் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

Entertainment News

Popular Categories